Wednesday, August 13, 2008

குறட் கருத்து

உவமையில்லான் இறைவன் என்று உரைப்பவர்தான்
  உவமையென இறைவனையே ஆக்குகின்றார்
  அகரமதற்குவமையென இறைவனையே
  அழகு படச் சொல்லி முதற் குறளிலேயே
  தவ முனிவர் வள்ளுவரும் தன்னை ஒரு
  தமிழனென்றுச் சொல்லுகின்றார் பெருமையோடு
  புவிஅதனின் முதல் மொழியாம் தமிழாம் அன்னை
  போற்றி நிற்பீர் தமிழர்களே வெல்க தமிழ்

  குறள்

  அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன்
  முதற்றே உலகு

0 மறுமொழிகள்: